தமிழ் கவிஞர் பிரபாகரபாபு ஒரு உயர் நிலை வங்கி அதிகாரி. இந்தியாவின் தலை சிறந்த வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் உதவிப் பொது மேலாளராக பணியாற்றுபவர்.
இவர் தமது சிறந்த இலக்கியத் திறனால் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் சந்தக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், புதுக்கவிதைகள், பொன்மொழிகள், மற்றும் கட்டுரைகள் பலவும் படைத்தது வருபவர்.
சந்தக்கவிதைகள் மற்றும் புதுக்கவிதை நூல்கள் ஐந்தும், ஹைக்கூ கவிதை நூல் ஒன்றும் பொன்மொழி நூல் ஒன்றும் வெளியீடு செய்து பின்னர் சங்கத்தமிழ் இலக்கியங்களான பத்து பாட்டு (பத்து நூல்கள்), குறுந்தொகை (400 பாடல்கள்), ஐங்குறுநூறு (500 பாடல்கள்), நற்றிணை (400 பாடல்கள்), தொடர்ந்து முத்தொள்ளாயிரம் செய்யுள்கள் அனைத்தையும் வார்ப்பிலக்கியங்கள் வடிவில் வெளியீடு செய்து வெற்றி கண்டவர்.
இது தவிர அவ்வையின் ஆத்திசூடி அனைத்தையும் ஒரு பக்கக் கட்டுரை நூலாக வெளியிட்டு பெயர் பெற்றவர். அனைத்திற்கும் சிகரமாக செம்மொழி பாடல் இசை வடிவில் வெளியிட்டு பாராட்டுகள் பெற்றவர்.
ஒரே நூலில் 560 ஹைக்கூ கவிதைகள் எழுதி வெளியிட்டு இதுவரை முறியடிக்கப்படாத சாதனை செய்திருப்பவர்.
சப்பானிய கவிஞர், தத்துவ ஞானி டைசகு இகேடாவின் Fighting for Peace எனும் பெருமை வாய்ந்த நூலை அமைதிக்கான போராட்டம் எனும் தலைப்பில் வெளியிட்டு புகழ் பெற்றவர்.
இது இவருக்கான சிறிய அறிமுகம் மட்டுமே. முழுமையான விபரங்களுக்கு Facebook இணையத்தில் prabhakarababu poet தேடலிலும், linkedin.com இணையத்தில் prabhakarababu (poet) கண்டு அறியலாம்.
please go to facebook to see profile: https://www.facebook.com/#!/profile.php?id=100002847534225
please go into linkedin to see profile: http://www.linkedin.com/profile/edit?trk=tab_pro


