![]() |
| கவிஞர் பிரபாகரபாபு |
பூவா தலையா போட்டதும் விழுந்தது
தலையைத் தொடர்ந்து பூ
விதவை
நிறைவேறாத ஆசைகளால்
சோர்வது இல்லை மனது
தொடர்ந்து சுரக்கும் தேவைகள்
தாங்க முடியாதபோது
தீட்சண்யமாய் இமை விரிக்கும்
நெற்றிக்கண்
வண்டியில் ஓடம்
ஓடத்தில் ஒரு நாள் வண்டி
என்னுள் தஞ்சமான நிழல்
கலங்கரை விளக்கு
தூரத்தில் மின்மினி
புத்தகப் பையுடன் பள்ளிக்குழந்தை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக