காலம் கிழித்தெறிந்த
தேதிகளைச் சேகரித்து
தேய்ந்த நாட்களைத்
தேடிப்பார்க்கிறேன்!
என் சுய சரித்திரத்தின்
ஆரம்ப ஏடுகளைப்
புரட்டிப்பார்க்கிறேன்!
என் தாயும் தந்தையும்
மரபு மீறாமல் எழுதிய மங்கலக்கவிதையாக நான் !
தங்கத்தமிழே!
அன்று
உன் நேச விரல்கள் அல்லவோ
கேசம் கோதி உச்சி முகர்ந்து
என் முதல் சுவாசத்திற்கு
முன்னுரை எழுதியது ?
நீயல்லவோ இந்த
மானுடத்தின் ஒலிகளை
செல்லமாய் என் செவிக்குள் இட்டு
என் சிறு காந்தக் கண்களுக்குள்
ஒளி துருவங்கள் நாட்டினாய்?
காலத்தைக் கரைத்து நான்
வளர்ந்தபோது
என்னைத் தத்தெடுத்த உனக்குக்
கொத்தடிமை ஆனேன்!
நான் உன் மடிக்குழந்தை !
இன்னும் சொல்வேன் .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக